Niroshini / 2016 மே 14 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா
திருகோணமலை-மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலியார்குளத்தில் அரச உத்தியோகத்தர்கள் 50 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (14) மொறவெவ உதவி பிரதேச செயலாளர் சஜித் வெல்கம தலைமையில் நடைபெற்றது.
பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஜ்சி நிலமே அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்படும் இவ்வீட்டுத்திட்டத்தில், திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் 50 உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் சாந்த ரணவீர, சேருவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன மற்றும் அரச அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
7 minute ago
11 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago