Princiya Dixci / 2016 மே 28 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிச்சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இருவரை, இன்று சனிக்கிழமை (28)கைதுசெய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் சீனிபுரவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி கந்தளாய் பகுதிக்கு உழவு இயந்திரத்தில் மணலைக் கொண்டு சென்ற போதே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் குறித்த சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் சந்தேகநபர்களை இன்று (28) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
38 minute ago