Editorial / 2019 ஜூலை 19 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர், புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்று (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயிற்றுவலி, வயிற்றுக் கடுப்பு, வாந்தி பேதி காரணமாகவே இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புல்மோட்டை தக்வா நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம், திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .