எப். முபாரக் / 2019 மார்ச் 25 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கந்தளாயில் கஞ்சா வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதவான் விசானி தேனுவது, இன்று (25) உத்தரவிட்டார்.
வென்ராசன்புர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நபர், கந்தளாய் பகுதியில் நீண்ட நாள்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளாரெனத் தெரிவித்த கந்தளாய் பொலிஸார், அவரைக் கைதுசெய்ய வேளை, அரைக் கிலோகிராம் கேரளா கஞ்சாவைத் தன்வசம் வைத்திருந்தார் எனவும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பாக, கந்தளாய் தலைமையகப் போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
17 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
26 minute ago