Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல் சலாம் யாசீம்
திருகோணமலை-கந்தளாய் அக்போபுர பகுதியில், பழைய டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு (22), இரண்டு டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டுள்ளனவென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள கெமுனு புற பகுதியில், வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் பழைய டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டெட்டனேட்டர்களையும் மீட்டதாகத் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட டெட்டனேட்டர்கள் குறித்து இன்றைய தினம் கந்தளாய் நீதிமன்றில், பீ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் இது தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago