2025 மே 17, சனிக்கிழமை

சிறைக்கைதி தப்பியோட்டம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 30 வயதுடைய சிறைக்கைதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை  (27) இரவு சிறைக் காவலாளியை தாக்கிவிட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 06ஆம் திகதி முதல் வைத்தியசாலையின்  உளநலப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் இவருக்கு  மாத்திரைகளை வழங்குவதற்காக தாதியர் அருகில் அழைத்துச் சென்றபோது சிறைச்சாலைக் காவலாளியைத்  தாக்கிவிட்டுச் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .