Niroshini / 2016 ஜூன் 11 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, எம்.முபாரக்
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கங்கை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 7 உழவு இயந்திரங்களையும் ஏழு நபர்களையும் நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சேறுவில- எல் பீ 2 பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (11) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Mar 2026