Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான் ஓயா காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய நால்வரை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23) மாலை கைதுசெய்துள்ளதாக கோமரங்கடவெலப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கெப்பித்திகொள்ளாவ டி 05- வாகல்கட பகுதியைச் செர்ந்த கே.எம்.திலகரெட்ண (வயது 48) பியசேனகே ஹேரத் பண்டார (வயது 50) ஹஸான் மதுசங்க ரத்னாயக்க (வயது 20) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும் உழவு இயந்திரம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்றத்துக்குச் சமூகம் தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கோமரங்கடவெலப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025