2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் சந்திப்பு

Niroshini   / 2016 மே 13 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செசன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தின் சமூக பொருளாதார கலாச்சார விடயங்கள் மீள்குடியேற்றம், கல்வி நிலை, சுற்றுலாத்துறையின் போக்கு, வேலைவாய்ப்பின்மை மற்றும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல விடயங்கள் இதன்போது மாவட்ட உதவி அரசாங்க அதிபரினால் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது, திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜனும் பதில் அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினருடன் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .