2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Princiya Dixci   / 2017 மார்ச் 18 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.

திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார்.

இச் சிறுமியின் உயிரிழப்புடன், திருகோணமலை மாவட்டத்தில் டெங்குவினால் பலியானோர் தொகை, 15 பேராக உயர்ந்துள்ளது.

திருகோணமலை பிரதேச சுகாதாரப் பிரிவில், 440 பேர், டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X