2025 மே 19, திங்கட்கிழமை

தவறிய பணப்பையை உரியவரிடமே ஒப்படைத்த நகைக்கடைக்காரர்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

மூதூர் நகரத்துக்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக வருகை தந்த யுவதி ஒருவர், தவறவிட்ட ஒரு இலட்சத்து 34 ஆயிரத்து 750 ரூபாய் பணப்பையை, அவ்வழியால் வந்த நகைக் கடை உரிமையாளரொருவர் அதனை கண்டெடுத்தது உரிய யுவதியடன் தொடர்பு கொண்டு ஒப்படைத்துள்ளார்.

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போன பணப்பை தனக்கு கிடைத்து விட்டதனையும் கண்டெடுத்தவர் அதனை கொடுக்க முன்வந்ததனையும் எண்ணி குறித்த யுவதி ஆனந்தகக் கண்ணீர் விட்டதுடன், பணம் கிடைத்ததையிட்டு தனது நன்றியையும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X