2026 மார்ச் 21, சனிக்கிழமை

நியமனக்கடிதம் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் ஹிரிஹடு சாயப் பகுதியில் அமைந்துள்ள பிரபல பௌத்த விகாரையின் விகாராதிபதிக்கு நேற்றுத் திங்கட்கிழமை (29) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவினால் நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

ஹிரிஹடுசாய விகாரையின் அதிபதியாக யுத்த காலம் தொட்டு இவ்விகாரையைப் பாதுகாத்து வந்த தெவிநுவர சந்திம ஹிமிக்கே கிழக்கு மாகாண பிரதான சங்கநாயக்க எனும் பெயர் சூட்டி அந்நியமனக்கடிதத்தினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டொக்டர் அறுன சிறிசேன மற்றும் அரசியல்வாதிகள் இராணுவ உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X