2025 மே 19, திங்கட்கிழமை

பெண்ணிடம் சில்மிசம்: நபருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி.விஸ்வானந்த பெர்ணாண்டோ, செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.

குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி சந்தேகநபர், கடற்கரையில் குளிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த குறித்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு அருகில் சென்று, பாலியல் ரீதியில் கையினால் தடவியதாகக் குறித்த பெண் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குச்சவெளி பொலிஸாரால் திங்கட்கிழமை (29) சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X