Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயாநகர் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றின் படகு இயந்திரத்தை (என்ஜின்) திருடிய குற்றச்சாட்டின் பேரில், ஜாயாநகரைச் சேர்ந்த நபரொருவரை, நேற்று (21) மாலை கைது செய்துள்ளதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் புடவைக்கட்டு-செந்தூர் பகுதியைச்சேர்ந்த எம்.கே.சுபைதீன் சித்தீக் (29 வயது) எனவும் அவரிடமிருந்து, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
படகு சொந்தக்காரரான ரபாய்தீன் வசீர் என்பவரினால், நேற்று காலை குச்சவெளி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025