2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பன்றி இறைச்சி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப். முபாரக்

திருகோணமலை, அக்போபுரவில் அனுமதிப்பத்திரமின்றி 13 கிலோகிராம் பன்றி இரைச்சி வைத்திருந்த நபரொருவரை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க, இன்று வெள்ளிக்கிழமை (13) உத்தரவிட்டார்.

அக்போபுரப் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், அனுமதிபத்திரமின்றி பன்றி இரைச்சி வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் 13 கிலோகிராம் இறைச்சியுடன், நேற்று வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்படார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .