2025 மே 03, சனிக்கிழமை

புதையல் தோண்டிய எண்மருக்கு விளக்கமறியல்

ஒலுமுதீன் கியாஸ்   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர் பொலிஸ் பிரிவிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும், இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எச்.எம். சம்சுதீன் உத்தரவிட்டார்.

 

பொலிஸாருக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த நபர்களில் ஒருவருடைய காணியைச் சுற்றி வளைத்து  மேற்கொண்ட சோதனையின் போது, புதையலுக்குத் தேவையான உபகரணங்களோடு, நேற்று முன்தினம் (05) இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X