பொன் ஆனந்தம் / 2019 மே 13 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தின், சங்கமம், தானியகம கணேசபுரபோன்ற பகுதிகளில், சந்தேகத்துக்கிடமான பலர் நடமாடுவதாக வெளியான தகவலையடுத்து, நேற்று (12) இரவு பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது.
இதையடுத்து, குறித்த பகுதிகளில், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என்றும் கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்பத்தும் வகையில், இளைஞர்கள், கிராமச் சந்திகளில் பாதுகாப்புக் கடைமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் காரணமாக, பெரும்பாலான மாணவர்கள், இன்று பாடசாலைக்குச் செல்லவில்லை என்றும் எனவே, போலியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் போலியான தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
50 minute ago
1 hours ago