2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதிரைக்குற்றிகளுடன் இளைஞன் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 27 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட், எப்.முபாரக்     

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில், சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளையும் வடிசாராய போத்தல்களையும் வைத்திருந்த மெதசிறிகமப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞனை கந்தளாய் தலைமையக சிறுகுற்றத்தடுப்பு பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகள், 8 வடிசாராயப் போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இளைஞன், கந்தளாய் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மற்றும் வடிசாராயப் போத்தல்களையும் வாகனத்தில் ஏற்றுவதற்குத் தயாராக இருப்பதாக கந்தளாய் சிறு குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த காட்டுப் பகுதியில் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு, இளைஞனைக் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X