2025 மே 19, திங்கட்கிழமை

மகளை அடித்த தந்தை விளக்கமறியலில்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை வரோதய நகர் பகுதியில் பதின்மூன்று வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்திய தந்தையை இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நேற்று வெள்ளிக்கிழமை(19) உத்தரவிட்டார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு  பணிப்பெண்ணாக சென்ற நிலையிலே தாயின் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையிலே பதின்மூன்று வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்துத்வுதாக   அயல் வீட்டுக்காரர்களினால் பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபரை வியாழக்கிழமை(18) மாலையில் கைதுசெய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை வெள்ளிக்கிழமை(19) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X