2024 மே 03, வெள்ளிக்கிழமை

மின் கட்டண அதிகரிப்பால் தொழிலாளர்கள் பாதிப்பு

Freelancer   / 2023 ஜூலை 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பேராறு பகுதியில் பல ஏக்கர்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

கடந்த காலங்களில் மின் கட்டணம் மாதாந்தம் 25000 ரூபாய் வந்தது தற்போது 15 ஆயிரம் வரை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

“விவசாயத்தில் ஒரு காலத்திலும் இவ்வாறான நெருக்கடியை நாங்கள் எதிர் நோக்கியதில்லை இந்த நிலையில் எமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

காலகாலமாக பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த நாம் மின் கட்டணம் அதிகரிப்பு காரணமாக உளுந்து கச்சான் பயிர்ச்செய்கை கைவிட்டு செல்ல வேண்டியே நிலை ஏற்பட்டுள்ளது” 

என தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத் தொழிலை மாத்திரமே நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் அவர்கள், மாற்றுத் தொழிலை எந்தவொரு தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி பயிர்ச்செய்கை மேற்கொள்ள உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .