2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

விபத்தில் தாயும் மகளும் படுகாயம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை-கண்டி பிரதான வீதியின் குறுச சந்தியில் இடம்பெற்ற விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா 04ஆம் கட்டை பகுதியைச்சேர்ந்த, ஜி.எச்.டபிள்யூ.விஜிதா (56 வயது) மற்றும் அவரது  மகளான டபிள்யூ.லஹிறு மதுசானி (28 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று (20) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், முச்சக்கரவண்டி ஆண்டாங்குளம் பகுதிக்குச் செல்வதற்கு திரும்பும் போது, வேகமாக வந்த கார், முச்சக்கரவண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .