2025 மே 19, திங்கட்கிழமை

ஸ்ரீதில்லையம்பல பிள்ளையார் ஆலய உற்சவம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை அன்புவழிபுரம் அருள்மிகு ஸ்ரீ தில்லையம்பல பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகி  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

தினமும் காலை 7.30 மணிக்கு பூஜையும் மாலை 4.30 மணிக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் சர்வ அலங்கார பூஜிதராக உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

எனவே, உற்சவகாலத்தில் பக்தர்கள் ஒழுக்க சீலர்களாகவும் கலாசார உடையுடனும் ஆலயத்துக்கு வருகை தருமாறு  ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X