2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்துகளை திருடிய இருவர் கைது

Editorial   / 2021 ஜூன் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்துகளை திருடினர் என்றக் குற்றசாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும் 30 மருந்து குப்பிகளை திருடியுள்ளனர்.

காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் ​சேவையாற்றும் சாரதி மற்றும் சிற்றூழியர் ஆகிய இருவருமே இவ்வாறு சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்துகளை திருடியுள்ளனர்.

ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரமோத எம்.சிறிவர்த்தன, ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட சி​னோர்ஃபாம் தடுப்பு மருந்துகளின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாயாகும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .