Editorial / 2021 ஜூன் 17 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினோர்ஃபாம் தடுப்பு மருந்துகளை திருடினர் என்றக் குற்றசாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரும் 30 மருந்து குப்பிகளை திருடியுள்ளனர்.
காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் சேவையாற்றும் சாரதி மற்றும் சிற்றூழியர் ஆகிய இருவருமே இவ்வாறு சினோர்ஃபாம் தடுப்பு மருந்துகளை திருடியுள்ளனர்.
ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரமோத எம்.சிறிவர்த்தன, ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட சினோர்ஃபாம் தடுப்பு மருந்துகளின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாயாகும் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .