Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 27 , பி.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு, நிறுவனங்கள் பல அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விசேட வர்த்தமான அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்துடன், நேற்று (27) வெளியிடப்பட்டது.
துறைமுகம், எரிபொருள், பொதுபோக்குவரத்து, மத்தியவங்கி, அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்கள், சேவைகள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட பதவிநிலையிலிருக்கும் அதிகாரிகளின் சேவைகள் உள்ளிட்டவையே அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது,
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மக்களுக்கு ஆகக் கூடிய சேவைகளை வழங்கும் வகையிலேயே, மேலே குறிப்பிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி தங்களுக்கு கிடைக்கவில்லையென்றும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாடளாவிய ரீதியிலுள்ள சகல கிராம சேவகர்களும், கடந்த 26ஆம் திகதி முதல் சட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago