2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

செங்கம்பள வரவேற்பு...

Menaka Mookandi   / 2015 மார்ச் 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தார். யாழ். சென்றடைந்த பிரதமரை, மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பலாலி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார். இதன்போது பிரதமருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலில் நாகவிகாரைக்குச் செல்லவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X