2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

27 வருடங்கள் நிறைவு...

J.A. George   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமானிகளின் தொட்டில்  என்று அழைக்கப்படும்  இலங்கை விமானப்படையின்  ஹிங்குராகொட விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள  இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவானது 1994 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்  2021 செப்டம்பர் 23 ம் திகதியுடன்  27 வருட அர்பணிப்பான  சேவையை பூர்த்திசெய்துள்ளது.

இந்த படைப்பிரிவானது பெல் 212 மற்றும் 206 ஆகிய ஹெலிகொப்டர்களை  கொண்டு  கடந்த 1994 செப்டம்பர் 23 ம் திகதி இல 401 ம்  படைப்பிரவாக ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் 1996 மார்ச் 23ம் திகதி இல 07 ம் படைப்பிரிவாக பெயர் மாற்றம் அடைந்தது.

இந்த படைப்பிரிவினால் எமது தாய்நாட்டுக்காக அளப்பெரிய மகத்தான சேவைகள் ஆற்றப்பட்டுள்ளது. மேலும் எமது நாட்டிற்காக முக்கியமான சந்தர்ப்பங்களில் தனது பங்களிப்பினை தொடர்ந்தும் வழங்கிவருகின்றது. 

எமது நாட்டுக்காக இப்படைப்பிரினால் வழங்கப்பட்ட சேவையினை அங்கீகரிக்கும்  வைகையில்  இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவுக்கு  2019 மார்ச் 02 ம் திகதி ஜனாதிபதி வர்ணம் வழங்கப்பட்டு  கௌரவப்படுத்தப்பட்டது.

இல 07 படைப்பிரிவானது  365 நாட்களும்  நாட்டிற்காக பொறுப்புடன் தயார் நிலையில் உள்ளது. இப்படைப்பிரிவின் மூலம் தேடல் மற்றும் மீட்பணிகள், யுத்தகாலக்களில் மற்றும் அனர்தங்களின்போதும் காயப்பட்டோரை மீட்டு கொண்டுசெல்லும் பணிகள்,  வான் வழிமூலம்  சரக்குப்பொருட்கள் மற்றும்  படைவீரர்களுக்கான  விமான போக்குவரத்து பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், பாரிய தீவிபத்துகளின் போது தீயணைக்கும் சேவை , போர் ரோந்து போக்குவரத்துக்கள், மருத்துவ செயற்பாடுகள், மனிதாபினம பணிகள் அனர்த்த நிவாரண போக்குவரத்துக்கள்  , அடிப்படை ஹெலிகொப்டர் பயிற்சிகள் , வீ  ஐ பி போக்குவரத்து சேவைகள் , இரவுநேர பயிற்சிகள் என்பன இடம்பெறுகின்றன. 

இந்த 27  வருட நிறைவை முன்னிட்டு இப்படைப்பிரிவினால் ஹிங்குரக்கொடையில் அமைந்துள்ள  ''போஷத் சிறுவர்  இல்லத்தில் " சிரமதானப்பணிகளும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

அத்துடன், யுத்தத்தின் போது  உயிர் நீத்த போர்வீரகளுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் ஆசிவேண்டி  விசேட   போதி பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .