Editorial / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூதூர் ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக கிடைக்கப்பெற்ற நோயாளர் காவு வண்டியை, கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (29) நடைபெற்றது. இதில், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் கலந்து கொண்டார்.
அதன்பின், ஆளுநர் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு வைத்தியசாலை ஊழியர்களை சந்தித்த ஆளுநர், வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தேவையான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினார்.
இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூதூர் இணைப்பாளர் முபாரக் மற்றும் பலர் கலந்துகொண்டனர். (ஹஸ்பர்)




16 minute ago
32 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
42 minute ago