Editorial / 2024 ஜூலை 28 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சினிமாத்துறையில், இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை பகுதிக்கு சாதனையை பெற்றுத்தந்து. எம்மை விட்டு பிரிந்துச்சென்ற அமரர் தர்ஷன் தர்மராஜின் நினைவாக இறக்குவானை பிரதேசத்தில் ( தர்ஷன் தர்மராஜ் மாவத்த ) எனும் பெயரில் வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டப்பட்டுது.
வீதிக்கு பெயர் சூட்டி அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, சனிக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் இணைப்பு செயலாளருமான எஸ்.ஆனந்தகுமார் கலந்து கொண்டிருந்தார்.
கொடக்கெவல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பிரியந்த பண்டார,இருக்குவானை பரியோவான் தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தர்ஷன் தர்மராஜின் குடும்பத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மஹிந்த குமார்








12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
20 minute ago