2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் களேபரம்...

Editorial   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓ.எம்.பி அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளை தடுத்து  நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கை! தந்திரமாக திருட்டுத்தனகமாக உள்ளே சென்ற அதிகாரிகள்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் களேபரம்

காணாமல் போனோர் அலுவலகத்தினால்  முல்லைத்தீவில் விசாரணைகள் நடத்துவதற்காக  19ஆம் திகதி இன்றும்  20ஆம் திகதி நாளையும்  244 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளை உள்ளே செல்லவிடாது தடுத்து நிறுத்தி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இதனை மீறி தந்திரமாக திருட்டுத்தனகமாக உள்ளே சென்ற அதிகாரிகள் விசாரணைகளை நடத்திய போது திடீரென உள்ளே நுழைந்து சென்ற  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்ட நிலையில் குழப்பநிலை ஏற்பாட்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டு  உறவினர்கள் வெளியேற்றப்பட்டபோது கடும் வாக்குவாதமும் குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது. (சண்முகம் தவசீலன்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X