2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விடைபெறும் நீதிபதிக்கு பாராட்டு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று (30) மாலை நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விசேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து, வாழ்த்துரை நிகழ்த்தினார்.

அத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி, நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தம்பதியினரை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துரை நிகழ்த்தினார்.

பெண் சட்டத் தரணிகள் சார்பிலும் நீதிபதிக்கு விசேட நிணைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்றுக் காரணமாக மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது, அம்பாறை மாவட்டத்தில் பலரின் ஜனாஸாக்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன், அவற்றை எரிக்காமல் வைத்திருக்குமாறு கட்டளையிட்டிருந்த நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் துணிச்சலான தீர்ப்புகள் குறித்து சட்டத்தரணிகள் பலரும் தமதுரையின்போது சுட்டிக்காட்டி, பாராட்டுத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .