Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியை வெற்றிகொண்டமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பங்களாதேஷ் அணித்தலைவர் முஷ்பிக்கூர் ரஹீம், பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணமென இவ்வெற்றியை வர்ணித்தார். பங்களாதேஷ் அணியின் வரலாற்றில், அவ்வணி பெற்றுக் கொண்ட 8ஆவது டெஸ்ட் வெற்றியாக இருந்த போதிலும், அவ்வணியின் மிக முக்கியமான வெற்றியாக இது கருதப்படுகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ரஹீம், "இது, பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கான அற்புதமான தருணம். இந்த டெஸ்ட், இருபுறமும் மாறி, மாறிக் காணப்பட்டது. எந்தப் பக்கமாக இப்போட்டி செல்கிறது எனத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழந்திருக்காத போது, சிறப்பான திறனை, வீரர்கள் வெளிப்படுத்தினர். இந்த கள நிலைமைகளில், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினால், புதிய துடுப்பாட்ட வீரருக்குக் கடினமாக இருக்குமென நாம் நம்பினோம்" என்றார்.
தேநீர்பான இடைவேளைக்குச் செல்லும் போது 100 ஓட்டங்களுக்கு விக்கெட் எதனையும் இழக்காமல் இருந்த நிலையில், அந்த இடைவேளையின் பின்னரே, இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ரஹீம், "பயிற்றுநர், சிறிது கோபப்பட்டார். தேநீருக்கு முன்பாக, நாங்கள் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் அவர்கள், சரியான இடத்தில் பந்துவீச வேண்டுமென உணர்ந்து பந்துவீசினர்" என்று குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக முன்னேறிவரும் பங்களாதேஷ் அணியின் அடுத்த சவாலாக, பங்களாதேஷுக்கு வெளியில் சிறப்பாகச் செயற்படுவதே காணப்படுவதாக, ரஹீம் ஏற்றுக் கொண்டார். "கடந்த 2 ஆண்டுகளாக, பங்களாதேஷுக்குள், நாங்கள் சிறப்பாக விளையாடினோர். ஆனால் எங்களது அடுத்த சவால், வெளிநாடுகளில் விளையாடுதலாகும். ஆடுகளங்களுக்குற்ப நாங்கள் விளையாட வேண்டும். நாட்டுக்குள் கிடைக்கும் அதே கள நிலைமைகளை, எல்லா இடங்களிலும் பெற முடியாது" என்று குறிப்பிட்டதோடு, இன்னும் அதிகமான போட்டிகளில் விளையாடும் போது, அந்த நிலையை அடைய முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago