2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்திய அணி முகாமைத்துவத்தில் இருந்து இந்திய சிமெண்ட் ஊழியர் நீக்கப்பட்டார்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் புள்ளி விபரவியல் நிபுணர் சதீஷ் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உலக 20-20 தொடரில் இந்திய அணியுடன் கடமையாற்றி வந்த இவர் உடனடியாக மீள நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்திய சிமெண்ட் நிறுவனத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் எவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பதவிகளில் இருக்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே சதீஸ் மீள நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதை இந்திய அணியின் ஊடக முகாமையாளர் உறுதி செய்துள்ள அதேவேளை புதியவர் விரைவில் அணியுடன் இணைவார் எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .