2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஐ.பி.எல் இருந்து முரளி ஓய்வு

A.P.Mathan   / 2014 மே 06 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். டுவென்டி டுவென்டி தொடர்களான ஐ.பி.எல், பிக் பாஷ், கரிபியன் டுவென்டி டுவென்டி போன்ற தொடரிகளில் விளையாடி தனக்கு அலுத்துப் போனதன் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக முரளி தெரிவித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பினனர் தனக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லை என்பதனால் தான் இந்தப் போட்டிகளில் விளையாடியதாகவும் இந்த தொடரே தன் இறுதித் தொடராகவும் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் வங்கடே மைதானத்தில் விளையாடும் போட்டியே இறுதிப் போட்டியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே மைதானத்திலேயே முரளி தனது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். 2011ஆம் ஆண்டு இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்து இருந்தாலும் உலக ட்வென்டி ட்வென்டி தொடரில் இலங்கை அணி இந்திய அணியை வெற்றி கொண்டது தனக்கு சந்தோசம் தருவதாகவும் முரளி தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .