2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் காலிறுதிப் போட்டியில்

A.P.Mathan   / 2014 ஜூலை 01 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாள் போட்டிகளில் ஜேர்மனி, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. 
 
பிரான்ஸ், நைஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2 இற்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மிகுந்த விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நைஜீரியா அணி பிரான்ஸ் அணிக்கு மிகப் பெரிய சவாலை வழங்கியது. 79 நிமிடங்கள் வரை கோல்கள் எதுவுமில்லாமல் போட்டி சமநிலையில் இருந்தது. 79ஆவது நிமிடத்தில் போல் பொக்பா பிரான்ஸ் அணியின் முதல் கோலை அடித்தார். 91ஆவது நிமிடத்தில் நைஜீரியா வீரர் அடித்த சொந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2 இற்கு 0 என வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக போல் பொக்பா தெரிவானார். 
 
இரண்டாவது போட்டியாக ஜேர்மனி, அல்ஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியா அணி இறுதி வரை போராடிய அதேவேளை, ஜேர்மனி அணிக்கு மிகுந்த சவாலை வழங்கியது. 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் அடிக்கவில்லை. 92ஆவது நிமிடத்தில் அன்றே சேலர் அடித்த கோல் மூலம்  மேலதிக நேரத்தில் ஜேர்மனி முன்னிலை பெற்றது. மெசுட் ஓசில் 120ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் 2 கோல்களினால் முன்னிலை பெற்ற போதும் போட்டி நிறைவடையும் தருவாயில் 121ஆவது நிமிடத்தில் அல்ஜீரியா அணி சார்பாக அப்துல்மொமீன் ஜபோ ஒரு கோலை அடித்தார். ஜெர்மனி அணி 2 இற்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. போட்டியின் நாயகனாக  அல்ஜீரியா கோல் காப்பாளர் ரைஸ் ம்ஹோலி தெரிவு செய்யப்பட்டார். 
 
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X