2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஜேம்ஸ் அன்டர்சனுக்கு ஓய்வு

A.P.Mathan   / 2014 நவம்பர் 05 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறவுள்ள இங்கிலாலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் விடுவிக்கப்பட்டுள்ளார். 
 
உலகக்கிண்ண தொடருக்கு அவர் பூரண உடற் தகுதியுடன் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அவர் அணியில் இருந்து விலக்கப்பட்டு ஓய்வு வழங்கப்பட்டுளளது. அவருடைய இடது முழங்காலில் சிறிய உபாதை ஒன்று ஏற்ப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த உபாதை மேலும் அதிகரிக்காமல் இருக்கவே இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் இங்கிலாந்து அணி தமது இரு முன்னணி பந்துவீச்சாளர்களும் இல்லாமலேயே இலங்கையில் விளையாடவுள்ளது. ஸ்டுவோர்ட் ப்ரோட் ஏற்கெனவே சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில் அணியில் இடம்பெறவில்லை. அன்டர்சனின் இடத்திற்கு இன்னும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இம்மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து இலங்கைக்கு வரவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .