2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கோலியை தாக்கிய பௌன்சர்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராத் கோலி, தான் எதிர்கொண்ட முதற் பந்துவீச்சில் பௌன்சர் பந்துவீச்சு தாக்குதலுக்கு இலக்கானார். மிச்சல் ஜோன்சன் வீசிய பந்து நேரடியா அவரின் தலைக் கவசத்தை தாக்கியது. பதற்றமடைந்த வீரர்கள், உடனடியா கோலிக்கு அருகில் ஓடிச் சென்று அவர் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கின்றாரா என சோதனையிட்டனர். பந்து வீசிய மிச்சல் ஜோன்சன் மிகவும் பதற்றமாக காணப்பட்டார். கோலியின் தலைக்கவச முன் பகுதியிலேயே பந்து தாக்கி இருந்தது. 
 
பௌன்சர் பந்துவீச்சு தாக்கி அவுஸ்திரேலியா வீரர் மரணமடைந்து 2 வாரங்களில் இந்த சம்பவம் நடைபெற்றமையே இந்த பதற்றத்துக்கு காரணமாக அமைந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .