2025 ஜூலை 31, வியாழக்கிழமை

அணித்தலைவராக ரோஹித்; பாண்டியா இல்லை

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 10 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில், உப அணித்தலைவராக லோகேஷ் ராகுல் பெயரிடப்பட்டுள்ளார்.

விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, இரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ராகுல் சஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், ருத்துராஜ் கைகவாட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், ஆவேஷ் கான், தீபக் சஹர், ஹர்ஷால் பட்டேல், மொஹமட் சிராஜ் ஆகியோர் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ருத்துராஜ் கைகவாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹால், இரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் பட்டேல், ஆவேஷ் கான், றிஷப் பண்ட் (விக்கெட் காப்பாளர்), இஷன் கிஷன் (விக்கெட் காப்பாளர்), புவ்னேஷ்வர் குமார், தீபக் சஹர், ஹர்ஷால் பட்டேல், மொஹமட் சிராஜ்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .