2026 பெப்ரவரி 07, சனிக்கிழமை

அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் இராஜினாமா

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓராண்டுக்குள் இரண்டாவது தடவையாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அஸாம் விலகியுள்ளார்.

பணிச்சுமையை குறைக்கும் நோக்கிலும், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தும் பொருட்டே இம்முடிவை மேற்கொண்டதாக பாபர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவராக பாபர் இரண்டாவது தடவையாக பதவியேற்று 13 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் ஆறிலேயே பாகிஸ்தான் வென்றதுடன், ஐக்கிய அமெரிக்காவுடனும் தோல்வியுற்று இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் முதலாவது சுற்றுடன் வெளியேறியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X