2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இந்திய அணியின் அடுத்த கெப்டன் யார்?

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி கெப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக,  கடந்த சனிக்கிழமை (15) அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் டெஸ்ட் கிரிக்கெட் கெப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லி விலகியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கெப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டை நியமிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இளம் வீரரான ரிஷாப் பண்டுக்கு கெப்டன் பொறுப்பை வழங்கினால் அவர் 3 வடிவிலான போட்டியிலும் இன்னும் சிறப்பாக செயல்பட உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X