Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (25) நடைபெற்ற இன்டர் மிலனுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாக கெவின் டி ப்ரூனே, ஸ்கொட் மக்டொமினே, அன்ட்ரே-பிராங்க் ஸம்போ அன்குய்ஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இன்டர் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹகன் கல்ஹனொக்லு பெற்றிருந்தார்.
இதேவேளை கிறெமொனெஸேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது. அத்லாண்டா சார்பாக மார்கோ பிரெஸியானி பெற்றதோடு, கிறெமொனெஸே சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றிருந்தார்.
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago