Editorial / 2017 ஜூன் 30 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், இன்று ஆரம்பிக்கவுள்ளது. இன்று இடம்பெறவுள்ள முதலாவது போட்டி, காலி சர்வதேச விளையாட்டரங்கில், காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடர், இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கை அணி, முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்துமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், சர்வதேச ஒருநாள் போட்டி அணிகளின் தரப்படுத்தலில், இலங்கை அணி 8ஆவது என்ற பரிதாபமான நிலையிலேயே காணப்படுகிறது. 7ஆவது இடத்தில், பங்களாதேஷ் அணி காணப்படுகிறது.
எனவே, இலங்கைக்கு அதிகளவிலான வாய்ப்புகள், தெளிவாக உள்ள போதிலும் கூட, முன்னைய காலங்களில் காணப்பட்ட அளவுக்கு, இலங்கை அணி பலமாக இல்லை என்பதே உண்மையாகும்.
நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இந்தியாவுக்கு எதிராகப் பெற்றுக் கொண்ட சிறப்பான வெற்றியைத் தவிர, அண்மைக்காலத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பிரகாசித்திருக்காத இலங்கை அணி, தங்களை நிரூபிப்பதற்காகக் களமிறங்குகிறது.
சிரேஷ்ட வீரர்களான டினேஷ் சந்திமால், திஸர பெரேரா, சுரங்க லக்மால் போன்றோர், இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான குழாமில் சேர்க்கப்படாத நிலையில், புதுமுக வீரர்கள், பிரகாசிப்பதற்கான வாய்ப்பை, இந்தத் தொடர் வழங்குகிறது.
அதேபோல, இலங்கை வீரர்களின் உடற்றகுதி பற்றி, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பகிரங்கமான விமர்சனங்களை முன்வைத்து, அதற்கு லசித் மலிங்க பதிலளித்த பின்னணியில் இந்தத் தொடர் இடம்பெறும் நிலையில், வீரர்களின் உடற்றகுதி பற்றிய கவனமும், அதிகமாகக் காணப்படும்.
அதைத் தவிர, அணியின் பயிற்றுநராக இருந்துவந்த கிரஹம் ஃபோர்ட், இத்தொடருக்கு முன்னர் விலகிய நிலையில், இடைக்காலப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட நிக் போதாஸுக்கும், தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பை, இந்தத் தொடர் வழங்குகிறது.
இந்தத் தொடரை, 5-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றுமாயின், 7ஆவது இடத்தில் காணப்படும் பங்களாதேஷ் அணியை, தசமப் புள்ளிகளின் அடிப்படையில் முந்தி, 7ஆவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புக் காணப்படுகிறது. எனவே, அந்த இடத்தை இலங்கை அணி பிடிக்குமா என்பதே, இத்தொடரின் முக்கியமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago