2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஏ.சி மிலனிலிருந்து வெளியேறும் லியோ?

Shanmugan Murugavel   / 2024 நவம்பர் 05 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் முன்களவீரரான ரஃபேல் லியோ, அக்கழகத்திலிருந்து வெளியேறுவது குறித்து சிந்திப்பதாகக் கூறப்படுகிறது.

மிலனுடன் 2028ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 25 வயதான லியோ, புதிய முகாமையாளர் போலோ பொன்செகாவின் முறைமைக்குள் வரத் தடுமாறுவதாக நம்பப்படுவதுடன், நடப்புப் பருவகாலத்தின் ஒன்பது போட்டிகளில் ஒரு கோலையே பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா மற்றும் சவுதி அரேபியக் கழகங்கள் லியோவைக் கைச்சாத்திட ஆர்வம் காட்டுகின்ற நிலையில், அவரைக் கைச்சாத்திட 175 மில்லியன் யூரோக்களை செலுத்த வேண்டியதாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .