2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சென்னைக்கெதிராக 182 ஓட்டங்களைப் பெற்ற ராஜஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 30 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில், குவஹாத்தியில் தற்போது நடைபெற்று வரும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற சென்னையின் அணித்தலைவர் ருத்துராஜ் கைகவாட், தனதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், நிதிஷ் ரானாவின் 81 (36), அணித்தலைவர் ரியான் பராக்கின் 37 (28) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பந்துவீச்சில், மதீஷ பத்திரண 4-0-28-2, நூர் அஹ்மட் 4-0-28-2, கலீல் அஹ்மட் 4-0-38-2, இரவீந்திர ஜடேஜா 2-0-10-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .