2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஒ.நா.தொடரில் றூட்டின் பங்களிப்புத் தாமதம்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 02 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜோ றூட், ஆரம்பப் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

இந்தத் தொடர், 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு, தொடர்ந்து 19, 22ஆம் திகதிகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளன. றூட்டுக்கு முதலாவது குழந்தை, இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், குழந்தை பிறக்கும் வரை, இந்தியாவுக்குச் செல்வதை அவர் தாமதப்படுத்தவுள்ளார். இங்கிலாந்து அணி, வியாழக்கிழமை, இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .