2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற நிலுக

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 03 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு, பூப்பந்தாட்ட வீரரான நிலுக கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு இலண்டன், 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக்குகளிலும் நிலுக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின்போது இலங்கையணிக்கு நிலுக தலைமை தாங்கியிருந்தார்.

இது தவிர, தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு வரையில் நிலுக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .