Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய நடுவரான ஜெராட் அபூட், அவுஸ்திரேலிய உள்ளூர்ப் போட்டிகளில் தலைக்கவசமணந்து நடுவர் பணியில் ஈடுபட்ட முதலாவது நடுவராக மாறியுள்ளார்.
இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் போட்டிகளில், மெல்பேர்ண் றெனிகேட்ஸ் அணிக்கும் பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியிலேயே, அவர் இவ்வாறு தலைக்கவசத்துடன் பணிபுரிந்தார்.
அவுஸ்திரேலிய நடுவரான ஜோன் வார்ட், இந்தியாவின் ரஞ்சிக் கிண்ணப் போட்டிகளில் தலையில் தாக்கப்பட்டு, இன்னமும் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையிலேயே, அச்சம்பவமே, தலைக்கவசம் அணியும் அவசியத்தை உணர்த்தியதாக, அவர் குறிப்பிட்டார்.
இருபதுக்கு-20 போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வருகின்ற நிலையில், அதிக பலத்துடனும் பந்தை அடிக்கின்றனரெனத் தெரிவித்த அவர், பாதுகாப்பென்பது அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
துடுப்பாட்ட வீரர்கள் பயன்படுத்தும் தலைக்கவசத்தையே அவர் அணிந்திருந்த போதிலும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் சபை ஆகிய மூன்றும் இணைந்து, நடுவர்களுக்கான தலைக்கவசமொன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக, அறிவிக்கப்படுகிறது.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026