2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

செல்சியில் தொடமுடியாதவர்கள் எவருமில்லை : மொரின்கோ

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறிமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மோசமான ஆரம்ப பருவகால பெறுபேறுகள் தொடருமிடத்து, அணியில் எந்தவொரு வீரரினது இடமும் பாதுகாப்பாக இல்லை என வீரர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

செல்சி அணியின் இறுதி இரண்டு பிறிமியர் லீக் போட்டிகளிலும் பயிற்சியாளர் ஜொஸ் மொரின்கோவால் அணித்தலைவர் ஜோன் டெரி அணிக்கு வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார். இதேவேளை சீஸ்க் பப்ரிகாஸ், இவானாவிக் ஆகியோர் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

கால்பந்தாட்ட உலகில் தொடமுடியாதவர்கள் என்ற நிலையை, தொடர்ச்சியான பெறுபேறுகள் மூலமே அடைய முடியும் என மொரின்கோ தெரிவித்துள்ளதுடன், இந்தத் தருணத்தில் தான் தொடமுடியாதவர்களைக் கொண்டிருக்கவில்லை என கூறியுள்ளார்.

ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில், செல்சி அணி தரவரிசையில் 14வது இடத்தில் இருக்கின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .