Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற பியொரென்டினாவுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கெப்ஹ்ரென் துராம் பெற்றதோடு, பியொரென்டினா சார்பாக மொய்ஸே கீன், றிக்கார்டோ சொட்டில் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (30) நடைபெற்ற றோமாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் சமப்படுத்தியது. மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டிஜ்ஜனி றெஜின்டர்ஸ் பெற்றதோடு, றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை போலோ டிபாலா பெற்றிருந்தார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago