Shanmugan Murugavel / 2016 நவம்பர் 08 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பமாகவிருந்த அடுத்த சுற்று ரஞ்சிப் கிண்ணப் போட்டிகளில், டெல்லியில் நடைபெறவிருந்த இரண்டு போட்டிகள், உயர் மட்ட வளி மாசடைதல் காரணமாக, டெல்லியிலிருந்து மாற்றப்பட்டுள்ளன.
கர்னைல் சிங் அரங்கத்தில் இடம்பெறவிருந்த, அஸாம், ஒடிஷா அணிகளுக்கிடையிலான குழு “பி: போட்டி ஹைதரபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, பெரோஷா கோட்லாவில் இடம்பெறவிருந்த ஹைதரபாத், இந்திய அரச சேவைகள் அணிகளுக்கிடையிலான குழு “சி” போட்டி, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாசடைவு காரணமாக, குஜராத், பெங்கால் ஆகிய அணிகளுக்கிடையிலான, ஹைதரபாத், திரிபுரா ஆகிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது சுற்றுப் போட்டிகள், புகைமூட்டம், மாசடைவு காரணமாக எந்தவொரு பந்தும் வீசப்படாமலேயே கைவிடப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .