2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

டிக்கெட் வருமானத்தை மக்களுக்கு நிவாரணமாக வழங்க தீர்மானம்

Freelancer   / 2022 ஜூன் 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள இலங்கை- அவுஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் கிடைக்கும்  வருமானத்தை முழுமையாக  பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை  தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் பல நாடுகள் இலங்கையின் நிலைமையை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை இடைநிறுத்தியுள்ள நிலையிலும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. 

இப்போதுள்ள நிலையில் மக்களுக்கும் நாட்டிற்கும் சிறிதளவிலான  நிவாரணங்களை வழங்கும் விதமாக இந்த கிரிக்கெட் போட்டி அமையும் என நம்புகின்றோம். பொருளாதார ரீதியிலும்  இலங்கைக்கு சாதகமாக அமையும் என்பதுடன், இலங்கை சுற்றுலாத்துறைக்கு தகுந்த நாடு என்பதை ஏனைய நாடுகளுக்கு தெரிவிக்கவும் இந்த போட்டிகள் வாய்ப்பாக அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை- அவுஸ்திரேலியா கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது  சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும், அதேபோல் டிக்கெட் விற்பனை மூலமாகவும் வருமானம் கிடைக்கும். எனவே டிக்கெட் மூலமாக கிடைக்கும் வருமானத்தை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கான நிவாரணங்களை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை  தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .